30 வல்லமை வாய்ந்த மேற்கோள்கள்
ஒவ்வொரு மேற்கோளிலும் புத்தகம் அல்லது பிரசங்கத்தின் தலைப்பு குறிப்பு இடப்பட்டுள்ளது.

“ஜெபம் எல்லையற்றது. இது நமது கண்டங்களுக்ககு இடையிலான குண்டு வீச்சாகும். இதை எங்கு இருந்தும் துவக்கி எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்."
லூசிபரின் சுயரூபம்
“பரிசுத்த ஆவியானவர் வழியை அறிவார், ஏனெனில் அதற்கு வழிகாட்டியவர் அவரே.”
நீங்கள் வல்லமை பெறுவீர்கள்
“இதயத்திலிருந்து வாழ்க்கையின் பிரச்சினைகள் எழுகின்றன. தேவனுடைய பிரமாணம் உங்கள் இதயத்தில் இருக்கும்போது, நீங்கள் தேவனுடைய வழியில் வாழ்கிறீர்கள்."
நீங்கள் வல்லமை பெறுவீர்கள்
“பகுதி கீழ்ப்படிதல் என்ற ஒன்று இல்லை.”
தேவனுடைய ஆசீர்வாதத்திற்கான வாசல்
“தேவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நபர், அனைத்தையும் அவருடைய பார்வையிலிருந்து பார்க்கிறார்.”
தேவனுடைய ஆசீர்வாதத்திற்கான வாசல்
“அறிவு உங்களுக்கு திறவுகோலைக் கைகளில் கொடுக்கும், ஆனால் விசுவாசம் தான் அந்தக் திறவுகோலைக் கொண்டு பூட்டைத் திறந்து, கிறிஸ்துவில் தேவனுடைய செல்வங்களின் பொக்கிஷத்தைத் திறக்கும்."
அடையாளம் கண்டுகொள்ளுதல்

“நான் நினைக்கிறேன், தேவனுக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் ஒரே ஒரு விஷயம் மனப்பூர்வமற்ற துதியாகும்.”
தேவனுடடைய பிரசன்னத்தில் பிரவேசித்தல்
“ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய ஞானத்தின் சில தனித்தன்மைகளை உலகிற்கு வெளிப்படுத்த வைத்திருக்கிறார், அதை அவர் தனது சாட்சியின் மூலம் வெளிப்படுத்துகிறார்.”
என் வாழ்க்கையின் புத்தகத்தில் இருந்து சில பக்கங்கள்
“தேவனுடைய மாதிரியின் படி, திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்க்கை துணையும் மற்றவருக்காக தனது வாழ்க்கையை ஒப்படைத்து, பின்னர் மற்றவரின் வழியாக புதிய வாழ்க்கையை வாழும் உடன்படிக்கையாகும்.”
வாழ்க்கைக்கான துணைகள்
“'உங்கள் ராஜ்யம் வருவதாக என ஜெபிப்பது, ராஜ்யத்தின் வருகைக்கு பங்களிக்கிற ஒவ்வொன்றுடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒரு அர்ப்பணிப்பை குறிக்கிறது.”
தேவனுடைய திருச்சபையை மீண்டும் கண்டுபிடித்தல்
“மனிதர்களாகிய நாம் அடிப்படையாக கொண்டிருக்கும் பிரச்சினை என்னவென்றால் நாம் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை உணராமல் இருப்பதுதான்.”
ஈடுபாடு விதிமுறைகள்
“உங்களை சுலபமாக மதிப்பீடு செய்யாதீர்கள், ஏனெனில் தேவன் உங்களை மிக உயர்வாகக் கருதுகிறார். அவர் உங்களுக்காக இயேசுவின் இரத்தத்தை முதலீடு செய்திருக்கிறார்.”
சோதனையின் நோக்கம்
“தேவனுக்கு கேட்கும் திறன் இன்றும் இருக்கிறது. நம்முடைய பாவங்களை அறிக்கைசெய்து, கைவிடுவதன் மூலம் அவருடனான தொடர்பை மீண்டும் திறக்கலாம்.”
நீங்கள் வல்லமை பெறுவீர்கள்

“திருமணத்தைச் சுற்றி நிலவும் மனநிலை என்பது எந்தவொரு பண்பாடு அல்லது நாகரிகத்திலும், அதன் ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய சூழ்நிலையை வெளிப்படுத்தும் துல்லியமான அளவுகோல் ஆகும்.”
தேவன் ஜோடி சேர்ப்பவர்
“விடாமுயற்சி, குறிப்பாக, தேவனுடைய சிறந்தவற்றைப் பெறும் முக்கியமான திறவுகோல் ஆகும்.”
தேவனுடைய சிறந்ததைப் பெறுதல்
“பாடம் இதுதான்: நீங்கள் விடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். இது அநியாயம், இது அபத்தம், இது அநீதியானது! அதனால் என்ன? தேவன் அதை ஏற்பாடு செய்தார். அவர் கட்டுப்பாட்டில் உள்ளார். அதுதான் விசுவாசம்!”
விட்டுக்கொடுத்தலின் கிருபை
“கிறிஸ்தவ வாழ்க்கை வெறும் இனிமையும், யாழின் இசையுமாக இருக்கவில்லை. ஒவ்வொரு அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கும் யுத்தம் என்பது அவரது முழு அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.”
பரலோகத்தில் யுத்தம்
“உங்கள் குழந்தைகளை கெடுப்பது இரக்கமல்ல. பெரும்பாலும், உண்மையாக இது சோம்பலின் வெளிப்பாடு. அவர்களை ஒழுக்கத்தில் கொண்டுவருவதை விட, அவர்களை கெடுப்பது எளிதானது.”
கணவர்கள் மற்றும் தந்தைகள்
“இளைப்பாறுவதற்கான வழி என்ன? தேவனுடைய சத்தத்தை கேட்பது. அதனால் தான் பல மனஅமைதியற்ற கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனுடைய சத்தத்தை கேட்கத் தெரியவில்லை.”
உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் (பகுதி 1)
“முக்கிய சொல்: அடையாளம் கண்டுகொள்ளுதல். இயேசு மரித்தபோது, நான் மரித்தேன். அவர் அடக்கம் செய்யப்பட்டபோது, நான் அடக்கம் செய்யப்பட்டேன். அவர் எழுந்தபோது, நானும் எழுந்தேன். அதை நம்பி, தேவனிடமிருந்து வரும் விசுவாசத்தின் மூலம் நீதியை பெறுகிறேன்.”
ரோமானிய யாத்திரை

“மனித ஆத்துமாக்களின் நீரூற்று இயேசுவே. நித்தியத்தில் அவர்களின் விதி, அவர்கள் இயேசுவின் எந்த பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதில் தீர்மானிக்கப்படும்.”
வாழ்க்கையின் பயணத்தின் முடிவு
“பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன: தாகம் கொள்ளுங்கள், இயேசுவிடம் வாருங்கள், குடியுங்கள்.”
நீங்கள் வல்லமை பெறுவீர்கள்
“ஒவ்வொரு முறையும் நீங்கள் சரியான தீர்மானத்தை எடுக்கும் போது, நீங்கள் சரியான பழக்கத்தை வலுப்படுத்தி, சரியான குணாதிசயத்தை உருவாக்குகிறீர்கள்.”
நீங்கள் வல்லமை பெறுவீர்கள்
“நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய முக்கியமான காரியமாக நான் நம்புவது என்னவென்றால், உலகில் முதல் பாவம் கொலை அல்லது விபச்சாரம் அல்ல, மாறாக பெறுமை தான்.”
பரலோகத்தில் யுத்தம்
“நாம் புரிந்து கொள்ளாத விஷயங்கள், தேவன் நமக்கு தெளிவான புரிதலை வழங்கியுள்ள சத்தியத்தின் பகுதிகளை மறைக்க அனுமதிக்கக் கூடாது.”
பரலோகத்தில் யுத்தம்
“நாம் அவருடைய சேவைக்காக இல்லை என்றால், தேவனுக்குச் சொந்தமானவர்களாக இருக்க முடியாது. அவரது வீட்டில் சுயநலமான, சுயவிருப்பமுள்ள தற்பெருமையானவர்களை தேவன் வரவேற்க மாட்டார்.”
பரலோகத்தில் யுத்தம்
“நம்முடைய சிலுவைகளை எடுப்பது என்பது நமது சுயவிருப்பத்தை ஒப்படைக்கிறதைக் குறிக்கிறது.”
தேவனுடைய ஆசீர்வாதத்திற்கான வாசல்

“பணத்திற்கு உங்கள் அணுகுமுறை, உண்மையில், தேவனிடத்தில் உங்கள் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.”
உங்கள் பணத்தைக் குறித்த தேவனுடைய திட்டம்
“உண்மையான வேதாகம விசுவாசம் இதயத்தில் இருந்து எழுகிறது, மேலும், நமது வாழும் விதத்தைத் தீர்மானிக்கிறது. இது வெறும் அறிவார்ந்த கருத்து அல்ல; இது இதயத்தில் செயல்படும் உண்மையான, கிரியையில் உள்ள சக்தியாகும்.”
வாழ்வளிக்கும் விசுவாசம்
“இந்த வாழ்க்கையில் நாம் உருவாக்கும் குணாதிசயம் நித்தியத்தில் நாம் எப்படி இருப்போம் என்பதை தீர்மானிக்கும். ஒருநாள் நமது பரிசுகளை விட்டு செல்ல நேரிடும்; நமது குணாதிசயம் எப்போதும் நம்முடன் நிலைத்திருக்கும்.”
வாழ்வளிக்கும் விசுவாசம்