மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் புதிய ஏற்பாட்டின் மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களை ஒன்றாகப் படிக்கிறோம். இன்னும், அவற்றின் முக்கியத்துவத்திற்காக, அதன் பெயர் ஒருபோதும் இடம்பெறவில்லை. அவை பழைய சுயம் மற்றும் புதிய சுயம் என்பதாகும்.

நேற்றும் நமது படிப்பிற்கான ஆரம்பப் பகுதி எபேசியர் 4:20-24 ஆகும்.

20 நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. 21 இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. 22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே, கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

பழைய சுயத்தின் தோற்றம் மற்றும் இயல்பு குறித்து நேற்று கவனம் செலுத்தினோம். சுருக்கமாக, நாம் பார்த்தது இதுதான்: பழைய சுயம் ஏமாற்றத்தின் விளைவாகும்; அதாவது, சாத்தானின் பொய் நேரடியாக தேவனுடைய வார்த்தைக்கு முரணானது. வஞ்சகம் (ஏமாற்றுதல்), அதற்கு நாம் அடிபணியும்போது, இச்சையை உண்டாக்குகிறது; அதாவது வக்கிரமான தீங்கு விளைவிக்கும் ஆசை. இச்சை, அதற்கு நாம் அடிபணியும்போது, பாவத்தை உண்டாக்குகிறது. பாவம், அதன் போக்கை எடுத்தவுடன், மரணத்தைப் பிறப்பிக்கிறது. எனவே, அது சீரழிவு செயல்முறையின் வரிசையாகும். ஏமாற்றுதல், இச்சை, பாவம் மற்றும் மரணம்.

பழைய சுயம் என்று விவரிக்கப்படும் இயல்பு இரண்டு தனித்துவமான அடையாளங்களைக் கொண்டுள்ளது: முதலாவதாக, அது கேடுள்ளதாக இருக்கிறது – ஆவிக்குரிய ரீதியில், ஒழுக்கநெறி ரீதியில், மற்றும் உடல் ரீதியில் கேடுள்ளதாக இருக்கிறது; இரண்டாவதாக, அது ஒரு கலகம் நிறைந்தது. “நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கலகம் இருக்கிறது,” என்று கூறி இதை சுருக்கமாகச் சொன்னேன்.

இன்று நாம் பழைய சுயத்தின் பிரச்சனைக்கான தேவனின் தீர்வை ஆராயப் போகிறோம். மேலும், இது நம் ஒவ்வொருவரையும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இது முழு மனித இனத்திற்கும் பொதுவான ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

முதலில், தேவனின் தீர்வு அல்லாத சில விஷயங்களைக் குறிப்பிடுவோம். சுய உணர்தல், சுய நிறைவு மற்றும் சுய வெளிப்பாடு போன்று “சுயம்” என்று தொடங்கும் அனைத்தும், நமது சமகால உளவியல் மற்றும் சிந்தனையின் அடிப்படையில் தினசரி பெருகுகின்றன, இவை அனைத்துக்கான தீர்வுகளையும் நாம் நிராகரிக்க முடியும், ஏனெனில், இவை அனைத்தும் சுயத்துக்கு அதிகாரம் கொடுக்கிறது, அந்த சுயம் ஒரு கலகமாக இருக்கிறது. எனவே, இந்த தீர்வுகள் ஒவ்வொன்றும், “சுயம்” என்று தொடங்கும் மற்றவைகளும் ஒரு கலகத்திற்கு அதிகாரத்தை சுதந்திரமாக வழங்குகின்றது. குழந்தைகளை நெறிப்படுத்துவதும் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் தவறு என்றும், குழந்தைகளுக்கு சுய கருத்தை வெளிப்படுத்தும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்த ஒரு தலைமுறையை நாம் கடந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். அந்த தலைமுறை, ஒரு கலகத்துக்கு கருத்துச் சுதந்தரத்தை அளிப்பதை தாமதாகவே கற்றுக்கொண்டது என்று நான் நம்புகிறேன்.

தேவனின் தீர்வு அல்லாத மற்றொரு விஷயம் சட்ட அமைப்பாகும். பழைய சுயத்தின் பிரச்சனையைச் சமாளிக்க பலர் சட்டத்தை நாடுகிறார்கள். ஆனால், மோசேயிடம் கொடுக்கப்பட்ட சட்டம் விரும்பிய முடிவை அடையவில்லை என்பதை இஸ்ரவேலின் தோல்வி நிரூபிக்கிறது. அதற்கு காரணம், சட்டத்தில் தவறு இல்லை என்பதல்ல. ரோமர் 7இல், பவுல் சொல்வது போல, சட்டம் நல்லதுதான், ஆனால் அது கலகத்தனத்தை மாற்ற முடியாது. மேலும், கலகத்தை மாற்றாத எதுவும் நிரந்தர தீர்வாகாது.

பழைய சுயத்திற்கு தேவனின் தீர்வு அல்லாத மூன்றாவது விஷயம், இது உங்களை ஆச்சரியப்படுத்தலாம், அதுதான் மதம். தேவன் பழைய சுயத்தை தேவாலயத்திற்கோ அல்லது ஞாயிறு பள்ளிக்கோ அனுப்புவதில்லை அல்லது பழைய சுயத்தை வேதவசனத்தை மனப்பாடம் செய்ய ஏற்பாடு செய்வதில்லை அல்லது தேவாலயத்தில் பாடல்களை பாடுவது அல்லது ஜெபம் செய்வது போன்ற மக்கள் செய்யும் எல்லாவற்றையும் செய்வதில்லை. மதம் என்பது ஒரு குளிர்சாதனப் பெட்டி போன்றது, அதை நான் அப்படிச் சொன்னால், அதற்கான காரணத்தை சிறிது நேரத்தில் உங்களுக்குக் காட்டுகிறேன். மதம் ஒழுக்கக்கேடை தற்காலிகமாக மறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம், ஆனால் இறுதியில் அதை மாற்ற முடியாது. இது நாம் காணும் சுவையான பீச் போன்றது. இது மிகவும் அழகாகவும், மிகவும் புதியதாகவும் இருக்கிறது, இது மிகவும் சுவையாகவும் இருக்கிறது, இன்னும், அதை அப்படியே விட்டுவிட்டால், அது விரைவாக வாடி அழுகிவிடும், ஏனெனில் ஒழுக்கக்கேட்டின் செயல்முறை ஏற்கனவே அதில் வேலை செய்கிறது. இப்போது அந்த பீச்சை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் அந்த ஒழுக்கக்கேட்டின் செயல்முறையை சிறிது காலத்திற்கு நீங்கள் தடுத்து நிறுத்தலாம், மேலும், குளிர்சாதன பெட்டியில் அது புதிய தோற்றமாக, கவர்ச்சிகரமானதாக இருக்கும், ஆனால், இறுதியில், குளிர்சாதன பெட்டியில் கூட அது வாடிவிடும்.

இப்போது, மதம் மூலம் “பழைய மனிதனை” சமாளிக்க முயற்சிப்பது பீச்சை குளிர்சாதன பெட்டியில் வைப்பது போன்றது. மதம் என்பது ஒரு வகையான குளிர்சாதன பெட்டியாகும். இது ஒழுக்கக்கேட்டின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கிறது, அது செயலில் இருப்பதை மறைக்கலாம், ஆனால் இறுதியில் அதை மாற்ற முடியாது.

எனவே, தேவனின் தீர்வு அல்லாத மூன்று விஷயங்கள் உள்ளன. அனைத்து வார்த்தைகளும் “சுயம்” என்று தொடங்கும்: சுய உணர்தல், சுய நிறைவு, சுய வெளிப்பாடு; இரண்டாவதாக, ஒரு சட்ட அமைப்பு; மூன்றாவதாக, மதம் ஆகும். இதில் எதுவும் செயல்படாது, ஏனெனில் இவை எதுவும் பழைய சுயத்தின் தன்மையை மாற்ற முடியாது. அவை கலகத்தை மாற்ற முடியாது. கவனியுங்கள், பழைய சுயம் ஒரு கெட்ட மரமாகும், இதைதான், மத்தேயு 7:17-19இல், கெட்ட மரத்தைப் பற்றி இயேசு கூறுகிறார்:

17 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். 18 நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. 19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.

எனவே பழைய சுயம் என்பது கெட்ட மரமாகும். அது நல்ல கனிகளைக் கொடுக்காது. எனவே, ஒரே ஒரு தீர்வு உள்ளது, அது வெட்டப்பட வேண்டும்! அதை ஒழிக்க வேண்டும்!

பழைய சுயம் என்பது ஒரு ச்கெட்ட மரத்தின் அடிப்படையில், அதற்கான தீர்வு, அதை வெட்டுவது என்று நாம் பார்த்தோம். மரத்தை விட, மனிதனுக்குப் பொருந்தும் மொழியைப் பயன்படுத்துவோம். பழைய சுயத்திற்கான தேவனுடைய தீர்வு, “மரணதண்டனை” என்ற ஒரு சாதாரண பழக்கமான வார்த்தையில் சுருக்கமாகக் கூறலாம். தேவன் பழைய சுயத்தை தேவாலயத்திற்கு அல்லது மனநல மருத்துவரிடத்திற்கு அனுப்புவதில்லை அல்லது பழைய சுயத்தை சட்டத்தின் கீழ் வைப்பதுமில்லை. தேவன் பழைய சுயத்தை தூக்கிலிடுகிறார். அந்த கலகத்திற்கு வேறு எந்த தீர்வும் இல்லை. ஆனால், சுவிசேஷத்தின் நல்ல செய்தி என்னவென்றால், கிறிஸ்துவில் ஏற்கனவே மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது! நற்செய்தியைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் இதுதான்! இது பழைய சுயத்தை கையாள்வதற்கான தேவனின் திட்டமாகும். ரோமர் 7:24-25இல் இது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பவுல் கூறுகிறார்:

24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? [அதுதான் பழைய சுயம், “கொடிய தாழ்ந்த இயல்பு.” யார் என்னை விடுவிப்பார்? பின்னர் அவர் நன்றியுடன் கூறுகிறார்:] 25 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன். [இந்த கொடிய தாழ்ந்த இயல்பிலிருந்து, இந்த பழைய சுயத்திலிருந்து விடுதலை.]

இயேசு நம்மை எப்படி விடுவித்தார்? ரோமர் 6:6 க்கு திருப்புவோம். பவுல் சொல்வது இதுதான்:

6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம் [அதுபற்றி, நான் கருத்து கூறுகிறேன். பல கிறிஸ்தவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவர்களுக்கு தெரியாது என்பதேயாகும். இது வேதத்தில் தெளிவாகக் கூறப்பட்ட உண்மை, ஆனால் பலருக்கும் இது தெரியாது].

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க அதுவே ஒரே வழியாகும். நமது பழைய சுயமாகிய அந்த கொடிய தாழ்ந்த இயல்பு, இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டது என்பதை அறிந்து நம்புவதன் மூலம்தான்; இயேசு சிலுவையில் மரித்தபோது, அந்தக் கலகமாகிய பழைய சுயம் அவரில் கொல்லப்பட்டது. நம்முடைய பழைய சுயம் அவருடன் சிலுவையில் அறையப்பட்டது. இது வரலாறு கூறும் உண்மை.

தேவன் இதை எப்படி எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் உண்மையாகவும், தெளிவாகவும் செய்தார் என்பதற்கான சொந்த சாட்சியத்தை சுருக்கமாக நான் உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன். இது பல ஆண்டுகளுக்கு முன்பு, ஈஸ்டர் சமயத்தில், ஈஸ்டர் பண்டிகையின் முக்கியத்துவத்தின் காரணமாக, கல்வாரி அல்லது கொல்கொதா மலை மற்றும் அதன் மீது மூன்று சிலுவைகளின் காட்சி என் மனதில் வந்தது, நடுவில் இருக்கும் சிலுவை சிறப்பாக இருந்தது. அது இருபுறமும் உள்ள மற்ற இரண்டையும் விட உயரமாக இருந்தது. இந்த காட்சி என் மனதில் இருந்தபடியே, பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசினார். மேலும், அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், “நடுவில் உள்ள சிலுவை யாருக்காக செய்யப்பட்டது?” பின்னர் அவர், “கவனமாக இரு, பதில் சொல்வதற்கு முன் யோசி” என்று சேர்த்து சொன்னது போல் இருந்தது.

எனவே, யோசித்துவிட்டு “நடுவில் உள்ள சிலுவை பரபாஸ் என்பவனுக்காக செய்யப்பட்டது என்று பதிலளித்தேன்.” அது உண்மையானது. பரபாஸ் அந்த மைய சிலுவையில் அறையப்பட இருந்தான், ஆனால் கடைசி நேரத்தில் தெய்வீக ஏற்பாட்டால், ஒரு பரிமாற்றம் செய்யப்பட்டு, பரபாஸின் இடத்தை இயேசு எடுத்துக்கொண்டார்.

எனவே, பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறினார், “பரபாஸ் என்பவனுக்கு சிலுவை அமைக்கப்பட்டு, அந்த நடு சிலுவையில் இயேசு அறையப்பட்டார், பரபாஸின் இடத்தை இயேசு எடுத்துக்கொண்டார்.”

நான், “ஆம், அது சரிதான்” என்றேன்.

அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “ஆனால், இயேசு உன் இடத்தைப் பிடித்தார் என்று நான் நினைத்தேன்?”

நான், “ஆம், அவர் அதை செய்தார்” என்றேன்.

அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அப்படியானால், நீதான் அந்த பரபாஸாக இருக்க வேண்டும்” என்றார்.

அந்த நேரத்தில், நான் அதை உள்நோக்கத்துடன் உணர்ந்துகொண்டேன். இதைப் பற்றி நான் ஒருபோதும் மக்களிடம் விவாதிப்பதில்லை. தேவனுடைய வார்த்தை அதைத் தெளிவாகக் கூறுகிறது, ஆனால், பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இதைப் பார்க்க உங்களுக்கு உதவ முடியும்: “நீங்கள் ஒரு குற்றவாளி! உங்கள் பழைய சுயமே குற்றவாளி, அதற்காகத்தான் சிலுவை சட்டப்பூர்வமாக செய்யப்பட்டது. இது உங்கள் விவரக்குறிப்புகளின்படி செய்யப்பட்டது. இது உங்களுக்கு சரியாக பொருந்தும். நீங்கள் அங்கேதான் இருக்க வேண்டும், நான் இருக்க வேண்டிய இடம் அது.”

ஆனால், தேவனுடைய இரக்கத்தின் நற்செய்தியின் புகழ்பெற்ற அற்புதமான செய்தி: கடைசி நேரத்தில் ஒரு பரிமாற்றம் செய்யப்பட்டது. பரபாஸின் இடத்தை இயேசு கைப்பற்றினார். இயேசு பழைய சுயத்தின் இடத்தை எடுத்துக்கொண்டார். நம்முடைய பழைய சுயம் அவருடன் சிலுவையில் அறையப்பட்டது. இது ஒரு வரலாற்று உண்மையாகும். தெரிந்தோ தெரியாமலோ, நம்பினாலும் நம்பாவிட்டாலும், அது நம்மைப் பாதிக்கும், ஆனால், பழைய சுயத்திற்கு தேவனுடைய தீர்வு மரணதண்டனை என்ற உண்மையை இது பாதிக்காது. அவர் அவனை மேம்படுத்தவில்லை, அவர் அவனை சீர்திருத்தவில்லை, அவர் அவனை மதவாதியாக்கவில்லை, அவர் அவனை தேவாலயத்திற்கோ அல்லது மனநல மருத்துவரிடமோ அனுப்பவில்லை, ஆனால் அவர் மரணதண்டனையை அவனுக்கு விதித்தார். தேவனுடைய கிருபை என்னவென்றால், மரணதண்டனை இயேசுவில் நடந்தது. எனவே, பவுல் சொல்வதுபோல் நாம் சொல்லலாம், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் அவர் என்னை விடுதலையாக்கினார்.”

எனவே, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை நாம் நாணயத்தின் எதிர்பக்கமான புதிய மனிதனைப் பார்ப்போம். புதிய மனிதனின் தோற்றம் மற்றும் தன்மையை நான் விளக்குகிறேன்.

லைக்
பகிரவும்